Wednesday, 16 November 2016

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்


முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்....

இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை வெவ்வேறு வழிகளில் மகிழ்வித்து சிவபதவியை அடைந்த சிவபக்தர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.அவர்கள் அறுபத்து மூவர் என சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தில் கூறுகிறார்.அவர்களில் முத்தரையர் குலம் உதித்தவர்கள் .

1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்
2 ) மங்கையர்க்கரசியார்
3 ) நரசிங்க முனையரைய நாயனார்
4 ) மெய்ப்பொருள் நாயனார்
5 ) கண்ணப்ப நாயனார் (  நாம் அனைவரும் அறிந்த ஒருவர் )

1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்

இவர் இரண்டாம் பெரும்பிடுகு என்று அழைக்கப்பட்ட சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தந்தை.

2 ) மங்கையர்க்கரசியார்

இவர் குவாவனின் மகளும். சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தங்கையும் ஆவார். இவர் நின்ற சீர் நெடுமாற நாயனார் என அழைக்கப்பட்ட கூன் பாண்டியனின் மனைவி.

3 ) நரசிங்க முனையரைய நாயனார்

இவர் திருமுனைப்பாடி நாட்டை திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் தந்தை வாணகோ அரையர் எனப்படும் தெய்வீகன் ஆவார். இவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதிநாட்டை ஆண்டு வந்த மெய்ப்பொருள் நாயனாரின் அண்ணன் .மெய்ப்பொருள் நாயனார் வாணகோ முத்தரையரின் சிற்றப்பா ஆவார்.

4 ) மெய்ப்பொருள் நாயனார்.

இவர் சேதி நாட்டையும் ,மேற்க்காவலூர் நாட்டையும் ஒரு சேர ஆண்டு வந்தார். இவர் பக்தரானாலும் போர்கள் பல செய்து வெற்றிகளைக் கண்டவர்.

தகவல் குறிப்பு தந்து உதவியவர் : உயர்திரு ..ஐயா.திருமலை நம்பி .புதுக்கோட்டை.

Tuesday, 15 November 2016

முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள்



முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள் .....முத்தரையர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணங்கள்.


1) இந்திய அரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 12  ,14 ,15 ,16 ,29 ,38 .46 ,141 ,309 ,335 ,338 ,338  ஏ,340 ,341 ,342 ,343 ,344 .
           
2) இந்திய அரசின் (முதலாவது) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் காகா காலேல்கர் குழு அறிக்கை (1985 ).

3) தமிழக அரசின் (முதலாவதாக) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் ஏ .என்.சட்டநாதன் குழு அறிக்கை (1970 )

4)இந்திய அரசின் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் மண்டல் குழு அறிக்கை (1980 )

5)தமிழக அரசின் இரண்டாவது  பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் அம்பா சங்கர்  குழு அறிக்கை (1985 )

6) மண்டல் குழுவின் பரிந்துரைப்படி பிரதமர் வி.பி.சிங் 1990 இல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர் சாத்தினார் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 9 நீதிபதிகள் பேராயம் விசாரித்து 16 .11 .1992 இல் வழங்கிய தீர்ப்பும் அதன் பிறகு கூறப்பட்ட தீர்ப்புகளும் .

7) மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த முக்கியமான அரசாணைகள் .

8) ஐ ஐ டி, ஐ ஐ எம் , முதலான மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இத பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இயற்றப்பட்ட மையக் கல்வி நிறுவனங்கள் ( சேர்க்கையில் இட ஒதுக்கீடு ) சட்டம் 2007 .

9) மைய்ய அரசின் கல்வியில் அளிக்கப்பட இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பேராயம் 10 .04 .2008 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு.

10) சட்டநாதன் குழு அறிக்கையிலும் அம்பாசங்கர் குழு அறிக்கையிலும் பல வகுப்புகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புரைகளும் புள்ளி விவரங்களும் .

11) பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதிகள் .

12) வே.ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதி

பெரியார் ஈ.வெ.ரா ..டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு..
(தகவல் உதவி : கலத்தம்பட்டு சதாசிவம் ராமலிங்கம் )

முத்தரையர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டிய ஒன்று. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நம் சமுதாயம் எவ்வளவு உரிமையை இழந்திருக்கிறோம் என்று அறிய வேண்டும். நாம் இழந்த உரிமையை பெற வேண்டும் என்றால் நம் சமுதாயம் அறிந்து இருக்க வேண்டியவைகளை நம் சமுதாய அமைப்புகள் கொண்டு வந்து மக்களிடம் சேர்த்து அதற்கான நடவடிக்கைளை எடுத்தார்களா என்று தெரியாது. சில சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தியிருக்கிறார்கள் ஆனால் இட ஒதுக்கீடு, அதன் அவசியம், தேவை, போன்றவற்றை மக்களிடம் அவர்கள் விளங்கி கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறி மக்களை திரட்டி கவன ஈர்ப்பு,கண்டன பேரணி,பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை சென்னையில் நடத்தினால் மட்டுமே இந்த இனத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

பழ .சங்கிலிதேவன் பழுவேட்டரையர் .

Saturday, 12 November 2016

ஆன்மீகத்தில் முத்தரையர்கள் -திருப்பதி சுவாமிகள்


திருப்பதி சுவாமிகள் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திருப்பதி சுவாமிகள் திரு .மு.சுப்ரமணிய முத்தரையருக்கும் ,வெள்ளையம்மாளுக்கும் மகனாய் 1873 ஆம் ஆண்டு அவதரித்தார்.திருப்பதி சுவாமிகளை பெற்றதால் அரவக்குறிச்சி ,ஆன்மீக வரலாற்றில் புகழ் பெற்றது.

சுவாமிகள் தொடக்கக் கல்வி முடிந்ததும் அரவக்குறிச்சி அருகில் உள்ள நல்லமாகாளிபட்டியில் உயர் கல்வியைத்  தொடர்ந்தார்.குருக்கள் பரம்பரையில் உதித்த தெய்வசிகாமணி குருக்கள் என்பார் இவரது நல்லாசிரியராக திகழ்ந்தார் .தமிழ் ,வடமொழி இலக்கியங்களைக் கற்றுத்  தேர்ந்தார்.

துறவு வாழ்க்கையில் நாட்டம் கொண்ட சுவாமிகள் தந்தையாரின் தோட்டத்திலுள்ள விநாயகர் கோவிலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.தமது குருவைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்ற சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பிரம்மாஸ்ரீ சுயம்பிரகாச சிவானந்த சுவாமிகளை நேரில் கண்டு அவரது சீடரானார்

அரவக்குறிச்சி கோவில் மடத்தில் தங்கி கணேசருக்கு ஆராதனை செய்துவரும் காலத்தில் தம்மை வந்தடைந்தவர்களுக்கு நல்லுபஹ்தேசம் செய்யும் வழக்கத்தை கொண்டார்.சில சமயங்களில் அண்மையிலுள்ள திருவெஞ்சமாக்கூடல் ,கரூர் முதலான தலங்களுக்குச் சென்று வருவதுண்டு.

வெஞ்சமாக்கூடல் விகிர்தீசர் மீதும் அம்மை பண்ணோர் மொழியாள் மீதும் சுவாமிகள் பக்திப் பரவசத்துடன் பாடிய பாடல்கள் நெஞ்சை நெக்குருக வைக்கும்.சுவாமிகள் தமது " பக்தி நெறி " எனும் நூலில் நான்கு பாடல்கள் விகிர்தீசர் மீதும், பண்ணோர் மொழியாள் மீதும் பாடியுள்ளார்.

"வாட லின்றி மகிழன்பர் நெஞ்சினுளும்
வாச மாய விகிர் தீசனே"

என்றும்
"விண்ணினேர் மேனி விகிர்தனார் மகிழ
வெஞ்சமாக் கூடலில் அமர்ந்த
பண்ணினேர் மொழியாய் வெண்மதிக் கொழுந்தின்"

என்றும்

சுவாமிகள் வெஞ்சமாக்கூடல் ஈசனையும் அம்பிகையையும் புகழ்ந்து பாடியுள்ளார்.

சுவாமிகளின் நூல்கள் .

திருப்பதி சுவாமிகள் பல அறிய நூல்களை இயற்றி அருளினார். அவற்றுள் கீழ்காண்பதை மட்டுமே இது கானும் நமக்குக் கிடைத்துள்ளன.

அவைகள்.
1 . ஸ்ரீ வித்தியா கீதை
2 . பக்தி நெறி
3 .பழமொழிப்போதம் (1932 )
4 .தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
5 .திருநாம மாலை (1942 )
6 .ஞானலோகம் என்னும் யுக்தி சாகரம் (1950 )
7 .முக்தி நெறி
8 .சதாசிவப்பிரும்ம ஸ்தோத்திரம்
9 .தேவிஸ்தோத்திரம்
10 .விவேக சித்திரம்
11 .தத்தாத்ரேயர் ஸ்தோத்திரம்
12 .மாரியம்மன் தாலாட்டு
13 .சிவசூத்திர விமர்சனி (உரைநடைநூல்)
14 .வில்மாதர் விஷம்
15 .சகுந்தலா அல்லது காதல் வெற்றி

சுவாமிகளின் மறைவு
சுவாமிகள் குளித்தலை கடம்பர் கோவிலில் தமது 64 ஆம் அகவையில் 1937  ஆம் ஆண்டு நீர் விகற்ப சமாதியில் அமர்ந்தார்.ஆண்டு தோறும் கடம்பர் கோவிலில் சுவாமிகளுக்கு குருபூசை நடைபெறுகிறது.

Friday, 11 November 2016

வலையர் (அ) வலையன் பெயர் காரணம்


"வலையன் என்றால் கோவம் கொள்ளாதீர்கள் "

வலையக்காரர் என்பதும் முத்தரையர் இனத்துள் ஒன்று .போரில் வளை வலை எரிதலும்,அதனால் படைகள் முன்னேறி வெற்றி   பெறுதலும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. வலை எறிதலில் தேர்ச்சி பெற்றவர்களே எய்ய முனைவர். முத்தரையர் இனத்தில் வலை எறிந்து சிறப்பு பெற்றதால் வளையக்காரர் எனச் சிறப்பிக்கப் பெற்றனர் .ஆதலால் இது தொழிலால் வந்த பெயர் . பெருமை கொள் முத்தரையர்களே.

வல்லயம் எறிதல் படைக்கலாம் எறிதலில் ஒன்றாகும், வல்லயம் என்பது ஒரு படைக்கருவி.அத்தொழில் புரிந்தோர் வல்லயர் எண்ணப்பட்டு நாளடைவில் வலையர் எனச் சிதைந்து வழங்கலாயினர். இதுவும் தொழிலால் அமைந்த பெயரே.

கோவை மாவட்டத்தில் வலையர் குடும்பங்கள் ராணுவத்தொடர்புடைய குடும்பம் என கருதியே அவர்களை காவல் நிலையம் போன்ற கண்காணிப்பு நிலையங்களில் வந்து தங்கச் செய்ததோடு அவர்கள் வசம் இருந்துவந்த வல்லயம் என்ற போர்கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள செய்தியை அங்கு வாழ் வலையர் குடும்பங்களை கேட்டு அறியலாம்.

இனி எவனாவது வலையன் என்ற ராணுவ தொடர்புடைய இந்த காவல் கார சாதியை பார்த்து, ஊருக்கு நியாயம் சொன்ன அம்பலகார சாதியை பார்த்து, வலையன் என்ற வரலாற்று பெயரை அவப்பெயரா சொல்லி இனத்தை கேவல படுத்த நினைத்து

"வலையன் "  என்று அழைத்தால் அவனிடம் மேலே சொன்ன வரலாறை கூறிவிட்டு "காலில் கிடக்கும் செருப்பால் அடித்துவிட்டு " அந்த இடத்தைவிட்டு  நகருங்கள். அதுவும் அதிகாரத்தின் எந்த உயரிய பதவியில் இருந்தாலும்.

வரலாறு தெரியாமல் இதுநாள் வரை இருந்ததற்கு இந்த அடி என்று கூறிவிட்டு வாருங்கள்.

குறிப்பு உதவி : சி.க .பழனிசாமி .MA .B Ed . ஒண்டிப்புதூர் ,கோவை.



இந்திய சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்கள் -தியாகி .அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்

அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

தந்தை :அய்யப்பன்
தாய் :முத்து பேச்சியம்மாள்

தேசப்பணிகள் :
1931 இல் கள்ளுக்கடை மறியல்,சுபாசுசந்திர போசு ,நேரு இளைஞர் மன்றம் தோற்றுவித்து நடத்துதல் .
1933 -இல் தனுசுகோடி காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசி.
ஆகஸ்ட் புரட்சியில் தனிநபர் சத்தியாகிரகம் .
ராமேஸ்வரம் இந்து தர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்து தலைவரானார்.தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு கமிட்டி செயலாளர் ,கிஜன சேவா சங்க செயலாளர் .
1933 இல் கள்ளுக்கடை மறியலினால் சிறையில் ஆங்கிலேயர் அடைத்தனர் .
1937 -இல் வலையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி 1952 -இல் கண்ணப்பர்குல வலையர் சங்கமாக நடக்க தொடங்கியது.தவத்திரு சிருங்கேரி மேடம் சங்கராச்சாரியாரின் தொடர்பு மடாதிபதி கல்யாணதாஸ் தொடாண்டிய ராமேஸ்வரம் ,இந்து  தர்ம சேவா சங்கத்திற்கு தலைவரானார்.
தமிழ்நாடு மீனவர் சங்கம்,விசைப்படகுக்காரர்கள் சங்கம் ,கல்வி ,பொது நலத்துக்கு தலைமையேற்று சேவை செய்தார்.

ராமேஸ்வரத்தில் தன்னால் தொடங்கப்பட்ட கண்ணப்பர் குல வலையர் சங்கத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துடன் இணைத்தார் .இவரது மிகசிறந்த சேவையால் 07.09.1980  இல் மாநில முத்தரையர் சங்கத்திற்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்களின் பங்கு.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிகமான முத்தரையர்கள் கலந்து கொண்டாலும் இவர்கள் இருவரும் அதிக பிரபலம் அடைந்தவர்கள் ஒருவர் ஆ.முத்தையா ,தளுகை பாதர்பேட்டை . மற்றுமொருவர் அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

இதில் காலத்தால் முந்தியவர் திரு ஆ.முத்தையா .
தந்தை  :ஆணை முத்துராஜா
தாய் :பெரியம்மாள்

1914  ஆம் ஆண்டு  15  வயதில் தந்தையை இழந்தார் .உடன் தனது தாயாருடன் இலங்கை சென்றார் .அங்கே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தனது 25 வயதில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாக பங்கு பெற்றார்.1942 செப்டம்பரில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார் மீண்டும் 1943 கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தேச தலைவரான காமராஜர்,கக்கன் ஆகியோர் தொடர்பு ஏற்பட்டது .1948 இல் திருச்சி வந்து காங்கிரசில் போட்டியிட்டு வென்றார் .1954 இல் திருச்சி மாவட்ட காங்கிரசில் செயலாளர் ஆனார் .

வகித்த பதவிகள்
1959 இல் திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினர்
1957 -1962  வரை உப்பிலியபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
1962 -1968 வரை திருச்சி நகர சிட்டி கிளப் தலைவர் .
1963  இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உறுப்பினராகத் தேர்வு பெற்று பணியாற்றினார்.



Thursday, 10 November 2016

வலையர்களின் உட் கிளைகள்

வலையர்களின் உட் கிளைகள்

கருப்பாசி வலையர்கள்
வன்னிய வலையர்கள்
செம்பாசி வலையர்கள்
சருகு வலையர்கள்
செட்டிநாடு வலையர்கள்
ஆயா வலையர்கள்
மூக்குத்தி போடாத வலையர்கள்

உட்கிளைகள் அடங்கிய பகுதிகள்

எட்டரை கோப்பு நாடு,
தானம்பு நாடு
வழுவாடி நாடு
நடு நாடு (அ) அசல் நாடு
குரும்ப நாடு
வன்னிய நாடு
அம்பு நாடு
புனல் நாடு
வேடன் நாடு
சுளுந்துக்காரன் நாடு
அம்பலகாரன் நாடு
வெள்ளாம்புட்டு நாடு
கறடி  நாடு
கங்கு நாடு
பாசிக்கட்டி நாடு
காரைக்காட்டி நாடு

மேலே கூறிய நாடுகள் பரவியுள்ள இன்றைய மாவட்டங்கள்.

 ராமநாதபுரம்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி (புதுக்கோட்டை)
திருநெல்வேலி
கோவை
வட ஆற்காடு
நீலகிரி மாவட்டங்கள்

தகவல் ஆதாரம் : தி வலையர் -கல்ச்சர் அண்ட் எகனாமிக்ஸ் , ஆர் .இ.தேசிங்கு செட்டி . பேராசிரியர் ராஞ்சி பல்கலைக்கழகம் .



Tuesday, 1 November 2016

அம்பலகாரர் செப்பேடு


63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் வரலாறு கூறும் அம்பலகாரர் செப்பேடு 

திருச்செங்கோடு நாணயவியல் ஆய்வாளர் விஜயகுமார் 47 செ.மீ .நீளமும்,27செ.மீ அகலமும் 2.25 கிலோ எடையும் கொண்ட அறிய செப்பேடு ஒன்றை கண்டு பிடித்துள்ளார்.இருபுறமும் தமிழில் 115 வரிகளில் அச்செப்பேடு எழுதப்பட்டுள்ளது .இதை ஈரோடு கொங்கு ஆய்வு மைய அமைப்பாளர்கள் புலவர்ராசு ,கொங்கு குழந்தைசாமி ஆகியோர் ஆய்வு செய்தனர் .

நெடுநாள் ஓலைச்சுவடியில் இருந்த பட்டயம் 1878 ஆம் ஆண்டு செப்பேடாக வெட்டப்பட்டுள்ளது . மதுரையைச் சேர்ந்த சேது அம்பலக்காரர் சோழ நாட்டுத் திருச்செங்காட்டங்குடியில் அன்னதான மடம் ஏற்படுத்தி திருவஞ்சைக்கனம் ஆத்மநாத பண்டாரம் வசம் மடத்தை ஒப்படைத்துள்ளார் .
சோழ நாடு ,பாண்டிய நாடு, தொண்டை நாட்டுப் பகுதிகளில் அம்பலகாரர் ,சேர்வைக்காரர் ,முத்துராயர் ,முத்திரியப்பார் ,வன்னியர் என்ற பட்டப்பெயர்  பெற்று வாழும் சேது அம்பலம் ,சோமணம்பலம் ,குமாரணம்பலம் ,முருகனம்பலம் ,வடுகனம்பலம் ,குரும்பனம்பலம் ஆகிய ஏழு பிரிவினரும்  அந்த ஏழுவகைத் தேவ அம்பலகாரர் தர்ம மடத்திற்கு உரியவர்கள் ,அந்த மடத்தை நிர்வகிக்கவும் ,அன்னதானம் செய்யவும் ஒவ்வொருவரும் குறு  காணிக்கையாக ஆண்டுக்கு இரண்டு பணமும்,திருமணம்,ருதுசாந்தி ,சீமந்தம் இவைகளுக்கு பெண் வீடு இரண்டு பணமும் கொடுக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டுள்ளனர் .

இந்த மடம் திருச்செங்காட்டங்குடியில் ஏற்படுத்திய காரணத்தால் அங்கு கி.பி 7 ஆம் நூற்றாண்டில் அங்கு வாழ்ந்த சிறுத்தொண்டர் வரலாறு மிகவும்  விரிவாகக் கூறப்பட்டுள்ளது .63 நாயன்மார்களில் ஒருவராகிய சிறுத்தொண்டர் வரலாறு கூறும் பெரிய புராணத்தில் கூறப்பெறாத பல அறிய  செய்திகள் சிறுத்தொண்டரைப் பற்றி கூறப்பட்டுள்ளது .

புதிய செய்தி 

மகாபாரத கதையில் வரும் கர்ணன் சொர்ணதானம்(பொன் ) செய்தான் .ஆனால் தானத்தில் சிறந்த அன்னதானத்தை செய்யவில்லை .அன்னதானம்  செய்யும்பொருட்டு கர்ணன் திருச்செங்காட்டங்குடியில் சிறுதொண்டராக அவதாரம் செய்தார் என்று செப்பேடு கூறுகிறது .அன்னதானத்திற்காக மடம்  ஒன்றை ஏற்படுத்தி அன்னக்கொடிகட்டி அன்னமிட்டார் .சிவபெருமான்  சிறுத்தொண்டரின் பிள்ளைக்கறி உன்ன நடந்து வந்த தெற்கு வீதி ” சிவம்பார்க்க ” நடந்த திருவீதி ” என்று அழைக்கப்பட்டது .இவைஅனைத்தும் பெரியபுராணத்தில் கூறப்படாத புதிய செய்திகளாகும் .


இச்செப்பேட்டில் ஒரு பெரியபுராணப் பாடல் உட்பட நான்கு பாடல்கள் எழுதப்பட்டுள்ளன ஒரு பாடலில் திருச்செங்காட்டங்குடிக்கு மந்திரபுரி,செங்காடு ,சத்யபுரி ,தந்திரபுரி ,ஆத்திவனம் ,பாஸ்கரபுரி ,சமுத்திரபுரி ,கணபதீச்சுரம் ஆகிய 8 பெயர் உள்ளதெனக் கூறுகிறது . மற்றொரு பாடலில்  அன்னதானத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது .முருகன் அம்சமாகப் பிறந்த உக்கிர குமார பாண்டியனின் ஏவல் செய் மக்கள் என்றும் ,இந்திர குலம்  என்றும் அம்பலகாரர்கள் குறிக்கப்பட்டுள்ளனர் .செப்பேட்டில் தல விருட்சம் ஆத்திமரம் அழகுடன் செதுக்கப்பட்டுள்ளது .
திருச்செங்காட்டங்குடி கோவில் திருவத்தி மகாமண்டபத்தில் கூடிக்கொடுத்த இந்த தர்ம மட செப்பேட்டை எழுதியவர் நாகூர் நமச்சிவாய முதலியார் .120 x 42 அடியுள்ள இந்த மடம் உள்ள இடம் 15 ஆயிரத்து 120 பணத்துக்கு வாங்கப்பட்டது.அருகில் சான்றோர் மடம் உள்ளது .
அம்பலகாரர் சார்பில் திருமருதை வேங்கு அம்பலகாரர்,குப்புசாமி அம்பலகாரர் ,செங்கழனி அம்பலகாரர் ,முத்துவேல் அம்பலகாரர்,முத்துவேல்  அம்பலகாரர் ,வெங்கடாசலம் அம்பலகாரர் ஆகியோர் கையொப்பமிட்ட இந்த செப்பேட்டில் ஆத்திவனம் அனந்த ராமய்யர்,ஆரூர் மாசிலாமணி தேசிகர்  ,முத்து வைத்திலிங்கம் பிள்ளை ,கணக்கு ராமலிங்கம் பண்டாரம் ஆகியோர் சாட்சி கையொப்பமிட்டுள்ளனர் .


தமிழக  சேது  அம்பலக்கார ,வரலாறு ,சைவ  சமய  வரலாறு  ஆகியவற்றில்  பல  புதிய  அறிய  தகவல்களை  கூறும்  இந்த  அறிய  செப்பேடு  வரலாற்று  முக்கியத்துவம்  வாய்ந்ததாக  கருதப்படுகிறது .தொடர்ந்து  இது  குறித்து  ஆய்வு  நடைபெற்று  வருகிறது .

ஆதாரம்தினமலர்  27.11.2004 ஈரோடு  மாவட்ட  பதிப்பில்  வந்தது .

இது  குறித்து  மேல்  அதிகமான  தகவல்கள்  தெரிந்தால்  தெரிய  படுத்துங்கள்  சமுதாயம்  அறிந்து  கொள்ளட்டும் .



Sunday, 23 October 2016


முத்தரையர் குல பெயர்களும் வழிபாடு தெய்வங்களும்

இரா .மணிவாசகம் . கோவை . 22.7.1984. அன்று எழுதிய  கட்டுரை . இந்த  கட்டுரையின் ஆசிரியராகிய  பொறியாளர் மணிவாசகம் அவர்களுக்கு நன்றி .

கொங்கு நாட்டில் பிற  சமூகத்தவர்களிடையே குடிப்பெயர் அல்லது  குலப்பெயர்கள் நடைமுறையில் உள்ளதுபோல் முத்தரையர்  இனத்தவரிடமும் உள்ளன  . அக்குலப் பெயர்களை கொண்டு கொள்வினை  கொடுப்புவினை போன்ற  திருமண  உறவுகள் நடை பெறுகின்றன . ஒவ்வொரு குலத்தாரும் வெவ்வேறு குல  தெய்வங்களை வழிபடுகின்றனர் . அத்தெய்வங்கள் பெரும்பாலும் காவல் தெய்வங்களே . தெய்வ  வழிபாட்டு  இடங்கள் மனித நடமாட்டம் குறைந்த  இடங்களிலே இருந்து  வந்திருக்கின்றன . வழிபாட்டின் போது ஆடு ,கோழி ,ஆகியவற்றைப்  பலியிட்டு ,கள் ,சாராயம் வைத்தும்  வழிபடுகின்ற  பழக்கம் தொன்று தொட்டு  இருந்து வருகிறது .கோவை , பெரியார்  (ஈரோடு ),நீலகிரி  மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள  சில  குடிபெயர்கள் அல்லது குலப்பெயர்கள் கீழே  கொடுக்கப்பட்டுள்ளன .

சின்னக் கருப்பன் கூட்டம்
பெரிய கருப்பன் கூட்டம்
வடுகன் கூட்டம்
செட்டீ கூட்டம்
பெரிய  குலத்தான் கூட்டம்
ஆண்டி கூட்டம்
கீறி கூட்டம்
திருவேட்டை கூட்டம்
காடை கூட்டம்
காத்தவராயன் கூட்டம்
கவுண்டன் கூட்டம்
வேட்டை கூட்டம்
கொண்டம் பட்டியான் கூட்டம்
தாசன் கூட்டம்
காரகமாடி கூட்டம்
குலங்காணியார் கூட்டம் (குலமூட்டி கூட்டம் )
பெருஞ்சாலையார் கூட்டம் (பெருஞ்சாலி கூட்டம் )
மாயன் கூட்டம்
தேவங் கூட்டம்
பரதேசி கூட்டம்
வில்வித்திறன் கூட்டம்
மூவாங் கூட்டம்

குளங்களைக் கூட்டம் என  வழங்குவது கொங்கு நாட்டு மரபு .எடுத்துக்காட்டாக  வில்வித்திறன் கூட்டம் என  வழங்குவர் .அவர்கள் அய்யா  நாச்சி ,அழகு நாச்சி ஆகிய  தெய்வங்களை வழிபடுகின்றனர் .ஒரு கூட்டத்தார்  பிறிதொரு கூட்டத்திலே மனவினைத் தொடர்பு கொள்வர் .


கருப்பராயன்
நாகர்
கன்னிமார்
வேட்டைக்காரன்
வீரமாத்தி
நடுக்காட்டு ஐயன்
அழகு நாச்சி
பகவதியம்மன்
கொங்கலம்மன்
வெள்ளையம்மாள்
சோலையம்மாள்
அரசனார்

கொங்கு நாட்டு முத்தரையர்கள் ஆண்களுக்கும் ,பெண்களுக்கும் தங்கள் குல  தெய்வங்களின் பெயர்களை இட்டு வழங்கி வருகின்றனர் . ஆண்களில்  அரசன் ,நாகன் ,நாசி ,அழகன் ,கருப்பன் , அய்யாவு போன்ற  பெயர்களும்  பெண்களில் கன்னியம்மாள் ,அழகால் ,நாச்சாள் ,வீரால் ,கருப்பாய் ,அரசால்  போன்ற  பெயர்களும் மிகுதியாக  வழங்கப்படுகின்றன .

Saturday, 22 October 2016

முத்தரையர்களும் அரசாணையும்

தமிழ்நாடு அரசு ஆணை எண்.15.நாள்.22.02.2006.கீழ்வரும்..உட்பிரிவுகள் அனைத்தையும்....ஒன்றாக சேர்த்து முத்தரையர் என அழைக்கலாம்.....என்று ஆணை வெளியிட்டுள்ளது.....

1. முத்துராஜா 
2.முத்திரியர் 
3.அம்பலக்காரர் 
4.சேர்வை 
5.சேர்வைக்காரர் 
6.வலையர் 
7.கன்னபகுல வலையர் 
8.பரதவ வலையர் 
9.பாளையக்காரர் 
10.காவல்காரர் 
11.தலையாரி 
12.வழுவடியர் 
13.பூசாரி 
14.முதிராஜ் 
15.முத்திரிய மூப்பர் 
16.முத்திரிய மூப்பனார் 
17.முத்திரிய நாயடு 
18.முத்திரிய நாயக்கர் 
19.பாளையகார நாயடு 
20.பாளையகார நாயக்கர் 
21.முத்துராஜா நாயடு 
22.வன்னியகுல முத்துராஜா 
23.முத்துரிய ஊராளி கவுண்டர் 
24.முத்துரிய ராவ் 
25.வேட்டுவ வலையர் 
26.குருவிகார வலையர் 
27.அரையர் 
28.அம்பலம் 
29.பிள்ளை

வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர்



இயற்கை அறிவோம்: புள்ளி    எலிமானா? சருகுமானா?

  

புள்ளி எலிமான்' என்றொரு உயிரினம் பற்றிச் சமீபத்தில் பல செய்திகள் வெளிவந்தன. இந்தப் பெயருடன் ஓர் உயிரினம், நம் பகுதிகளில் இருக்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. தேடிப் பார்த்ததில், ஆங்கிலத்தில் ஸ்பாட்டட் மவுஸ்டீர் என்று அழைக்கப்படுவதால், ‘புள்ளி எலிமான்‘ என அப்படியே மொழிபெயர்த்துவிட்டார்கள். 
சங்கக் கால உயிரினங்கள் பற்றி பல நூல்களை எழுதியுள்ள பி.எல்.சாமி, தன்னுடைய கட்டுரை ஒன்றில் இந்த உயிரினத்தைப் புள்ளி எலிமான் எனக் குறிப்பிட்டுள்ளார். என்றாலும், அது பழைய பதிவு. நம் மரபையே அறியாமல், ஆங்கிலத்தில் உள்ளதை அர்த்தம் புரியாமல் மொழிபெயர்ப்பதால் ஏற்படும் பிரச்சினை இதுவென்று, சூழலியல் அறிஞர் சு. தியடோர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
சருகு மான்
இந்த உயிரினத்தின் தமிழ்ப் பெயர் ‘சருகு' மான் என்னும் சொல், தமிழில் இரட்டைக்குளம்பிகளுக்கான பொதுச்சொல்; அதனால் இந்த உயிரினம் மக்கள் வழக்கில் சருகுமான் எனப்பட்டது. இலைச்சருகுகள் இடையே மறைந்து வாழும் தன்மையைக் கொண்டிருப்பதால், இதற்குச் சருகு என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இக்கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருந்தாலும் உயிரினங்களுக்குக் காரணப் பெயரைச் சூட்டுவது தமிழ் மரபன்று; ஒன்றிலிருந்து பிரிந்து, இயல்புநிலை திரிந்து பொய்யாக உள்ளவற்றைத்தான் ‘சருகு' என்று அழைப்பது தமிழ் சொல் மரபு (இலைச்சருகு, வெங்காயச்சருகு என்பதைப் போல). மெல்லியதான, ஒடியக்கூடிய தன்மையைச் சுட்டவும் சருகு என்ற சொல் பயன்பட்டிருக்கிறது.
மாயம் காட்டும்
அதேநேரம் இந்த உயிரினம் இரட்டைக்குளம்புகளுடன் பார்க்க மான்களைப் போலிருந்தாலும், இந்த உயிரினம் மான் வகையைச் சேர்ந்தது அல்ல; இரட்டைக்குளம்பிகளான இயங்குதிணை உயிரினத்திலிருந்து பிரிந்து, திரிந்துபோய்ச் சரியாகப் பரிணாமவியல் மாற்றம் அடையாத உயிரினம் இது. எனவே தோற்றத்தில் மானைப் போலிருந்தாலும், உயிரின வகைப்படி இது மான் அல்ல. மானைப் போன்ற சருகு என்பதால், சருகுமான் எனப்பட்டது.
இந்தப் பொய்யான தன்மையும் காய்ந்த இலைதழைகளினூடே தன்னுருவை மறைத்து மாயம் காட்டித் திரிவதாலும் இதற்குப் பொய்மான், மாயமான் என்னும் பெயர்களும் உண்டு. சருகு என்னும் இடுகுறிப் பெயரின் தன்மையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கலால், பொய்மான் என்னும் காரணப்பெயராக மாற்றவேண்டிய அவசியம் தமிழ் மரபில் ஏற்பட்டிருக்கிறது. இலக்கியத்தில் சருகுமான் பொய்மானாயிற்று. மாரீசன் பொய்மானாக வேடமெடுத்து ஓடினான் என்றால், சருகுமானாக வேடமெடுத்து ஓடினான் என்பதுதான் பொருள். பொய்யான மான் என்று பொருள் காண்பது, பொருள்மயக்கம். கல்கி எழுதிய ‘பொய்மான் கரடு' என்னும் புதினம் நினைவுக்கு வரலாம்.
மறைந்த இயற்கை அறிவு
கடந்த ஓரிரு ஆண்டு கால நாளிதழ்களைப் புரட்டினால் திண்டுக்கல், வில்லிப்புத்தூர், கடையநல்லூர், களக்காடு, தர்மபுரி, நீலகிரி ஆகிய ஊர்ப்புறங்களில் சருகுமான்கள் வேட்டையாடப்பட்ட செய்திகள் வந்துள்ளன. திண்டுக்கல், நத்தம், சிறுமலைப் பகுதிகளில் இந்தச் சருகுமான்கள் இப்போதும் வேட்டையாடப்பட்டுவருகின்றன. சருகுமான்கள் வாழ்வதற்கேற்ற மலைகளும் கரடுகளும் இப்பகுதிகளில் இருப்பதால், இங்கு அவை அதிகமாக இருந்திருக்கலாம். ஏனென்றால், இப்பகுதியில் வசிக்கும் வேட்டுவச் சமூகமான வலையர் சாதியில், சருகுவலையர் என்னும் பெரும்பிரிவு உண்டு.
இந்த வேட்டுவச் சமூகத்தினர் சருகுமான்களைக் குலச்சின்னமாக வைத்திருந்ததால் சருகுவலையர் எனப்பட்டனர்; இதுபோன்ற குலச்சின்ன மரபு எல்லாச் சமூகங்களில் உண்டு. ஆனால், பிற்காலத்தில் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்புகள் அற்றுப்போன நிலையில், சருகுமான்களைப் பற்றிய அறிவை மதுரை, திண்டுக்கல் மாவட்ட மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். அப்போது, சருகுமான்களின் தோற்றத்தை வைத்து அவற்றைக் காட்டு எலிகள் எனக் கருதி, சருகுவலையர்களை எலிகளோடு தொடர்புபடுத்தினர். அதேநேரத்தில் தங்கள் வயல்களைப் பாழ்படுத்தும் எலிகளைப் பிடிக்க மட்டும், சருகுவலையர்களின் மரபுஅறிவைப் பயன்படுத்திக் கொண்டனர்.
இயற்கை பற்றிய அறிவைப் பெரும்பான்மை மக்கள் இழந்து வருவதன் அடையாளமே மேற் கண்டது போன்ற பெயர் குழப்பங்கள், வகைக் குழப்பங்கள். இயற்கை பற்றிய மரபு அறிவைப் பாதுகாக்க சருகுமான் போன்ற பெயர்களையும், அந்த உயிரினங்களையும், சருகுவலையர்களின் அறிவையும் ஒருங்கிணைந்து பாதுகாக்க வேண்டும்.
கட்டுரையாளர், தமிழ் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: Writerchiththaanai@gmail.com

முத்தரைய இனத்தின் முகவரி



அரியலூர் மாவட்டம் புதுக்கோட்டையில் புலவர்  க.மருதமுத்து சேர்வை -கழுவாய் அம்மாளுக்கு பிறந்த வரலாற்று சிங்கம்.

வரலாற்று வித்தகர்,களஞ்சிய செம்மல்,தமிழக வரலாற்று மேதை,வரலாற்று பேரொளி,நாணயவியல் அறிஞர் முதலான பட்டங்களுக்கு சொந்தக்காரர்,தஞ்சை தமிழ்ப்  பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள வாழ்வியல் களஞ்சியத்திற்கு 210 கட்டுரைகள் வழங்கியுள்ளார்,மேலும் வானொலி ,தொலைக்காட்சி ஆகியவற்றிலும் உரையாற்றியுள்ளார்....

அற்புத ஆசிரியரை....நம் முத்தரையர் இனம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை என்பதுதான்....உண்மையாக இருக்க முடியும்......

100 க்கும் மேலான ஆய்வு கட்டுரைகளையும் வழங்கி சிறப்பித்து இருக்கார்....

இத்தனை பெருமைக்குரியவரும் எனது மாமாவுமான ....மகரிசிதாசன் .ம.ராஜசேகர தங்கமணி....

இவரது சில படைப்புகள்...

முதலாம் ராசேந்திர சோழன்
பாண்டியர் வரலாறு
ரஷ்ய வரலாறு
சுற்றுலாவில்
கருவூரும் கன்னித்தமிழும்
கருவூரார் வரலாறு-ஓர் ஆய்வு
தமிழக வரலாற்றில் புதிய ஒளி
கோ இளங்கோ முத்தரையன்
பெரும்பிடுகு முத்தரையன்-ஈ
ஞான வள்ளல் திருப்பதி சுவாமிகள்
தமிழ்நாட்டுசுற்றுலா தலங்கள்
பொதுத்துறை ஆட்சியியல்-பாகம் 3
பஞ்சாயத்து அரசு
கண்ணப்ப நாயனார் வரலாறு
அருள்மிகு சௌந்தர நாயகி அம்மன் வரலாறு
தான்தோன்றி  மலைத் தலை வரலாறு
கரூர் பசுபதி ஈசுவரர் திருக்கோவில் தல வரலாறு
வேட்டுவர் வீர வரலாறு
முத்தரையர் வரலாறு
கொங்கு சமுதாயம் (வேட்டுவர்)
பல்லவர் வரலாறு
தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்
தமிழக வரலாற்றில் சில புதிய கண்டுபிடிப்புகள் (பதிப்பாசிரியர்)
சுற்றுலாவியல் -ஓர் அறிமுகம்
மதிப்புக் கல்வி
கோயிற் கலைகள் (அச்சில் )
நம்ம காமராசர் (அச்சில்)
கல்வெட்டியியல் (அச்சில்)
வேட்டுவர் குளங்களும் தெய்வ  கோவில்களும்

முத்தரையர்களும் பட்டங்களும்


முத்தரையர்களுக்கு ஒரு வேண்டுகோள் !!! 32 மாவட்டங்களிலும் உள்ள முத்தரையர்களின் வழங்கு பெயர்களை இங்கு பதிவிடுகிறோம் மாவட்ட வாரியாக . உங்களது மாவட்டங்களில் இதை தாண்டி வேறு ஏதேனும் பெயர்களில் முத்தரையர்கள் இருந்தால் அந்த பெயரை பதிவிடுங்கள். .இது ஒரு குழு முயற்சியே அன்றி தனி ஒருவனின் முயற்சி இல்லை என்று சமுதாய சொந்தங்கள் அறியவும்.
இவண்: பழனிவேலு சங்கிலிதேவன் பழுவேட்டரையர் ,

கடலூர்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாய்க்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முத்துராஜா
7) தலையாரி
8) முத்திரியர்
9) வலையர்
10) வன்னி முத்திரியர்

விழுப்புரம்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாயக்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முத்துராஜா
7) தலையாரி
8) முத்திரியர்
9) வன்னி முத்துராஜா

தஞ்சாவூர்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) முத்துராஜா ,
6) முத்திரியர்
7) வலையர்
8) வன்னிய குல முத்துராஜா பிள்ளை
9) முத்திரிய ராவ்
10) முத்திரிய ராவ் பிள்ளை
11) பிள்ளை
12) அம்பலம்
13) ராவ்
14) பூசாரி
15) மழவராயர்

நாகப்பட்டினம்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) முத்துராஜா ,
6) முத்திரியர்
7) வளையர்
8) வன்னிய குல முத்துராஜா
9) முத்திரிய ராவ்
10) முத்திரிய ராவ் பிள்ளை
11) பிள்ளை
12) அம்பலம்

திருவாரூர்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) முத்துராஜா ,
6) முத்திரியர்
7) வன்னிய குல முத்துராஜா
8) பிள்ளை
9) முத்திரிய ராவ்
10) அம்பலம்

மதுரை
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) மூப்பர்
6) முத்திரியர்
7) வன்னிய குல முத்துராஜா
8) மூப்பனார்
9) கண்ணப்பர்குல வலையர்
10) அம்பலம்

தேனீ
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) மூப்பர்
6) முத்திரியர்
7) வன்னிய குல முத்துராஜா
8) மூப்பனார்
9) கண்ணப்பர்குல வளையர்
10) அம்பலம்

திண்டுக்கல்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) மூப்பர்
6) முத்திரியர்
7) பாரி
8) மூப்பனார்
9) கண்ணப்பர்குல வலையர்
10) அம்பலம்
11) பூசாரி

ராமநாதபுரம்
1) அம்பலகாரர்
2) வலையர்
3) சேர்வை
4) மூப்பர்
5) முத்திரியர்
6) வேடர்
7) மூப்பனார்
8) கண்ணப்பர்குல வலையர்
9) அம்பலம்
10) வேட்டுவர்
11) வேட்டுவ மூப்பர்
12) வேடர்
13) கண்ணப்பர்

விருதுநகர்
1) முத்தரையர்
2) அரையர்
3) அம்பலகார சேர்வை
4) அம்பலகாரர்
5) வலையர்
6) கண்ணப்பர் குல வலையர்

சிவகங்கை
1) அம்பலகாரர்
2) வலையர்
3) மூப்பர்
4) முத்திரியர்
5) மூப்பனார்
6) கண்ணப்பர்குல வலையர்
7) அம்பலம்
8) வேட்டுவர்

திருநெல்வேலி
1) வலையர்
2) முத்தரையர்
3) அம்பலகாரர்
4) சேர்வை
5) அம்பலகார சேர்வை
6) பிள்ளை

தூத்துக்குடி
1) வலையர்
2) முத்திரியர்
3) அம்பலகாரர்
4) சேர்வை
5) அம்பலம்
6) அம்பலகார சேர்வை

கன்னியாகுமரி
1) வலையர்
2) அரையர்
3) அம்பலகாரர்
4) சேர்வை
5) அம்பலம்
6) பிள்ளை

வேலூர்
1) முத்துராஜா
2) பாளையக்கார நாயக்கர்
3) தலையாரி நாயக்கர்
4) தலையாரி நாயுடு
5) முத்திரிய பாளையக்கார நாயக்கர்
6) பாளையக்கார நாயுடு
7) முத்திரிய நாயக்கர்

திருவண்ணாமலை
1) முத்துராஜா
2) பாளையக்கார நாயக்கர்
3) தலையாரி நாயக்கர்
4) முத்திரிய பாளையக்கார நாயக்கர்
5) தலையாரி நாயுடு
6) முத்திரிய பாளையக்கார நாயக்கர்
7) பாளையக்கார நாயுடு
8) முத்திரையை நாயக்கர்
9) முத்தரையர்
10) முத்திரியர்
11) முத்திரிய நாயுடு
12) வன்னிமுத்துராஜா
13) முத்துராஜா நாயுடு

சேலம்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) அம்பலகாரர்
4) காவல்காரர்
5) சேர்வை
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்

நாமக்கல்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) அம்பலகாரர்
4) காவல்காரர்
5) சேர்வை
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
8) முத்துராஜா
9) முத்திரியர்
10) அம்பலகாரர்
11) காவல்காரர்
12) சேர்வை
13) ஊராளிக்கவுண்டர்
14) வேட்டுவ கவுண்டர்

தருமபுரி
1) வலையர்
2) முத்துராஜா
3) முத்திரியர்
4) அம்பலகாரர்
5) சேர்வை
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்

திருச்சிராப்பள்ளி
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) பிள்ளை
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) தலையாரி
10) கண்ணப்பகுல வலையர்
11) சேர்வை

கரூர்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) பிள்ளை
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) தலையாரி
10) கண்ணப்பகுல வலையர்
11) சேர்வை

பெரம்பலூர்
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) பிள்ளை
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) தலையாரி
10) கண்ணப்பகுல வலையர்
11) சேர்வை

புதுக்கோட்டை
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரன்
4) அம்பலகாரர்
5) பூசாரி
6) வழுதியார் /வழுவாட்டித்தேவர்
7) முத்தரையர்
8) ஊராளிக்கவுண்டர்
9) கண்ணப்பக்குல வலையர்
10) சேர்வை
11) அம்பலம்
12) மழவராயர்

கோவை
1) வலையர்
2) முத்திரியர்
3) முத்தரையர்
4) அம்பலகாரர்
5) வலையர்
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்

ஈரோடு
1) வலையர்
2) முத்திரியர்
3) முத்தரையர்
4) அம்பலகாரர்
5) வலையர்
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்

நீலகிரி
1) வலையர்
2) அம்பலகாரர்
3) சேர்வை
4) சேர்வைக்காரர்
5) வேட்டுவ கவுண்டர்
கிருஷ்ணகிரி
1) முத்துராஜா
2) முத்திரியர்
3) காவல்காரர்
4) சேர்வை
5) அம்பலகாரர்
6) ஊராளிக்கவுண்டர்
7) வேட்டுவ கவுண்டர்
சென்னை பெருநகரம்.
1) முத்திரியர்
2) பாளையக்காரர்
3) வலையர்
4) முத்துராஜா
5) தலையாரி
6) பிள்ளை
7) முத்திராசு
8) அம்பலகாரர்
9) முத்திரைய நாயுடு
10) பாளையக்கார நாயுடு
11) முத்துராஜா நாயுடு
12) முத்திரிய நாயுடு
13) முத்திரிய நாய்க்கர்
14) முத்துராஜகுல சத்திரியர்
15) முதிராஜ்
காஞ்சிபுரம்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாயக்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முதிராஜ்
7) தலையாரி

திருவள்ளூர்
1) முத்திரிய நாயுடு
2) முத்துராஜா நாயுடு
3) பாளையக்கார நாயுடு
4) பாளையக்கார நாயக்கர்
5) கண்ணப்ப நாயக்கர்
6) முதிராஜ்
7) தலையாரி
மேற் கூறிய தகவல்கள் 1990 ஆம் ஆண்டு திரட்டப்பட்ட தகவல் . நன்றி திரு கு.ம .சுப்பிரமணியம் அவர்களே.ஆசிரியர் அவர்கள் இந்த தகவலை திரட்டி இருந்தபோது வேட்டுவ கவுண்டர் பிரிவை பட்டியலில் விட்டுவிட்டிருந்தார் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கிறோம்.உங்கள் நட்பில் இருக்கும் அனைவருக்கும் பகிருங்கள். நன்றி.

வலையர்களின் கடல்


மீனவர்களின் பிரச்சினையா தமிழர்களில் யாருக்கு உணர்வு வருகிறதோ நமக்கு அதிகமான உணர்வு வரவேண்டும் .
மொழி பிரச்சினையா நமக்குத்தான் அதிகமாக இருக்கவேண்டும் வேண்டும் .ஏனைய தமிழ் சாதிகளுடன் இணைந்து போராட வேண்டும் .
வங்கக்கடல் அது வலையர்களின் கடல்
அரபி கடல் அது அரையர்களின் கடல்
பாரத (இந்திய ) பெருங்கடல் இனி அது பரதவ வலையர் பெருங்கடல்
நம்மள சுற்றி அரபி,வங்காளம்,ஹிந்தியம் எங்கே போனது நமது தமிழின் அடையாளம் , மீனவர்கள் பிரச்சினை அது நமது பிரச்சினை இல்லை என்று மத்திய மாவட்டத்தில் உள்ளவர்கள் அமைதி காக்கிறார்கள், காவேரி நதி நீர் பிரச்சினை அது நமது பிரச்சினை இல்லை என்று கடலோர மீனவர்கள் அமைதி காக்கிறார்கள் , பாழாய்ப்போன பாலாறா அது வட தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பிரச்சினை நாம் அமைதியாக இருப்போம் என்று இருந்து விடுகின்றார்கள் முல்லை பேறியாறா அது தென் தமிழ்நாட்டின் பிரச்சினைன்னு ஒதுங்கி நிக்காம தமிழனின் பிரச்சினையா பார்க்கணும் இன்னும் ரொம்ப நுட்பமா பார்த்தா இங்க எல்லாம் நம்ம ஆளுக நிறைய எண்ணிக்கைல இருக்கான்
முத்தரையர்களுக்கு அதிக உணர்வு இருக்கணும் மண் ,மொழி,இயற்கை வளம் எல்லாம் நம் இனத்தோட அதிகம் தொடர்புடையது இது குறித்து மேலதிகமா பதிவுகளை தொடராக போடுவோம் படிச்சு ஒருத்தருகிட்டையும் சொல்லிடாதீங்க நண்பர்களே ,உள்ளாட்சி தேர்தலை கவனிங்

முத்தரையர்களின் இன்றைய நிலை


"முன்னைத் தமிழருள் மூத்தவர் வலையரே" என்ற வரி க்கு ஏற்ப முன்னாடி வந்த கல்லு கட்டடதின் அஸ்திவாரதுல மாட்டிகிடுச்சாம் இறுதியா வந்த கல்லு கோபுரத்தின் உச்சதுல உட்கார்ந்துகிடுச்சாம் . கோபுரத்துல இருக்குற கல்லுக்குதான் பூரண கும்ப மரியாதை
அதைப்போல வரலாற்றில் பின்னாடி வந்தவர்கள் எல்லாம் படித்தும் படிக்காமலும் அரசியல் அதிகாரம் அனைத்தையும் கைப்பற்றி புதிய வரலாறை தனக்காக
எழுதிக்கொண்டார்கள்.
கடைசி வரை அடுத்தவர்களை ஏற்றிவிடும் ஏணியாக இருப்பேன் ஏணியில் ஏறி வரமாட்டேன் என்று இறுமாப்பு கொண்டு இருந்தால் வீழ்வது நீ மட்டும் அல்ல உன் இனமும்தான்.
வாக்குகளை செலுத்திவிட்டு இன்று ஊமைகளாய் இருக்கும் சமுதாயம் (நீ) உன் வாக்கை வாங்கியவன் இன்று இருக்கும் இடம் எங்கே.
ஓட்டு போட்ட நீ ஓட்டாண்டியாகிவிட்டதோட மட்டுமல்லாமல் உன் சமுதாயமும் ஒட்டாண்டியாகிவிட்டது
அதை இந்த கவிதையின் வரிகல் மிக அழகாக எடுதுச்சொல்லுகிறது இங்கு எனது முத்தரைய சமுதாயத்தை இந்த கவிதையின் வரிகளோடு ஒப்பிட்டு பார்க்கின்றேன்.
உழைத்த மாடுகளின்
கால்களுக்குச்
சேற்றுப் பூச்சு;
உயரத்தில்
சும்மா இருந்த கொம்புகளுக்கோ
வர்ணப் பூச்சு!
மாட்டுப்பொங்கலைபற்றி பாடிய ஒரு கவியின் வைர வரிகளில் இருந்து.நன்றி உயர்திரு கனி அவர்களே.
மாற்று இனத்தின் உயர்விற்க்கு ஏனியாய் இருந்தது முத்தரையர் சமுதாயம்.இருந்தும் அமைதியாய் இருந்தது அதற்க்கு கவி சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் அருமையான கவிதையை இங்கு உதாரணதிற்க்கு அழைத்துக்கொள்ளலாம்.
அகன்ற உலகு நான் 
என்றது அகல்
அழ்கிய உடல் நான்
என்றது திரி
அசையும் உயிர் நான்
என்றது சுடர்
உழைப்பு வடித்த
உதிரத் துளிகளாய்த்
தேங்கிய எண்ணெய்
வாய் திறக்கவே இல்லை
இந்த கவிதையில் தேங்கி நிற்க்கும் எண்ணெயாக முத்தரையர் சமுதாயத்தை ஒப்புமை படுத்தி பார்க்கின்றேன்.மாற்றாறை புகழ் வெளிச்சத்திற்க்கு கொண்டு சென்று தன்னை இருட்டு ப ள்ளத்திற்க்குள் ஒளித்துக்கொண்டும் புதைத்துக்கொண்ட முத்தரையர் சமுதாயத்தை மாற்று சமுதாய நண்பர்கள் இந்த நன்றியை மறந்து எங்க்ளை நசுக்குவது முறையா?????
உன் சமுதயதினருக்கு வேலை வாய்ப்பு கிடையாது,இட ஒதுக்கீடு கிடையாது எதிலும் உனக்கான நீதி கிடையாது ஆனால் மாற்றாரின் வெற்றிக்கு மாடாய் உழைக்கின்றாய் இதை மித்ரா அவர்களின் ஐக்கூவை இங்கு எனது இனதுக்காரணோடு பொருத்திப்பார்கின்றேன்.
பசித்த குழந்தைகள் அழும்
கஞ்சி காய்சுவான் தந்தை
சுவரொட்டிகல் ஒட்ட.
இது போல அடுக்கி கொண்டே போகலாம்.என்ன செய்ய போகின்றோம் நாம்.
காசுக்காக உன்னை விற்க்கும் கூட்டம் ( உன் வாக்குகளை) யார் என்று தெரியாமல் உன் இனத்தின் அழிவை தடுக்காத தற்குறிகளின் போக்கை நோக்கும்போது கீழ்கானும் கவிதையொடு இணைத்துப் பார்க்கின்றேன் நா.காமரசன் அவர்களின் கவிதையின் ஈற்றடி இரண்டை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.
நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!
சங்கினால் பால் கொடுத்தால் வாய் நோகும் என்று நுங்கினால் பால் புகட்டுவா(ர்)ரை (என) எதிர்னோக்கி ஏமாந்து நிற்க்கும் என் இனத்தை காக்க என்ன செய்வது.என்ன செய்ய போகின்றோம்.

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை...