Friday, 11 November 2016

இந்திய சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்கள் -தியாகி .அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்

அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

தந்தை :அய்யப்பன்
தாய் :முத்து பேச்சியம்மாள்

தேசப்பணிகள் :
1931 இல் கள்ளுக்கடை மறியல்,சுபாசுசந்திர போசு ,நேரு இளைஞர் மன்றம் தோற்றுவித்து நடத்துதல் .
1933 -இல் தனுசுகோடி காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசி.
ஆகஸ்ட் புரட்சியில் தனிநபர் சத்தியாகிரகம் .
ராமேஸ்வரம் இந்து தர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்து தலைவரானார்.தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு கமிட்டி செயலாளர் ,கிஜன சேவா சங்க செயலாளர் .
1933 இல் கள்ளுக்கடை மறியலினால் சிறையில் ஆங்கிலேயர் அடைத்தனர் .
1937 -இல் வலையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி 1952 -இல் கண்ணப்பர்குல வலையர் சங்கமாக நடக்க தொடங்கியது.தவத்திரு சிருங்கேரி மேடம் சங்கராச்சாரியாரின் தொடர்பு மடாதிபதி கல்யாணதாஸ் தொடாண்டிய ராமேஸ்வரம் ,இந்து  தர்ம சேவா சங்கத்திற்கு தலைவரானார்.
தமிழ்நாடு மீனவர் சங்கம்,விசைப்படகுக்காரர்கள் சங்கம் ,கல்வி ,பொது நலத்துக்கு தலைமையேற்று சேவை செய்தார்.

ராமேஸ்வரத்தில் தன்னால் தொடங்கப்பட்ட கண்ணப்பர் குல வலையர் சங்கத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துடன் இணைத்தார் .இவரது மிகசிறந்த சேவையால் 07.09.1980  இல் மாநில முத்தரையர் சங்கத்திற்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

No comments:

Post a Comment

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை...