Saturday, 22 October 2016

முத்தரையர்களின் இன்றைய நிலை


"முன்னைத் தமிழருள் மூத்தவர் வலையரே" என்ற வரி க்கு ஏற்ப முன்னாடி வந்த கல்லு கட்டடதின் அஸ்திவாரதுல மாட்டிகிடுச்சாம் இறுதியா வந்த கல்லு கோபுரத்தின் உச்சதுல உட்கார்ந்துகிடுச்சாம் . கோபுரத்துல இருக்குற கல்லுக்குதான் பூரண கும்ப மரியாதை
அதைப்போல வரலாற்றில் பின்னாடி வந்தவர்கள் எல்லாம் படித்தும் படிக்காமலும் அரசியல் அதிகாரம் அனைத்தையும் கைப்பற்றி புதிய வரலாறை தனக்காக
எழுதிக்கொண்டார்கள்.
கடைசி வரை அடுத்தவர்களை ஏற்றிவிடும் ஏணியாக இருப்பேன் ஏணியில் ஏறி வரமாட்டேன் என்று இறுமாப்பு கொண்டு இருந்தால் வீழ்வது நீ மட்டும் அல்ல உன் இனமும்தான்.
வாக்குகளை செலுத்திவிட்டு இன்று ஊமைகளாய் இருக்கும் சமுதாயம் (நீ) உன் வாக்கை வாங்கியவன் இன்று இருக்கும் இடம் எங்கே.
ஓட்டு போட்ட நீ ஓட்டாண்டியாகிவிட்டதோட மட்டுமல்லாமல் உன் சமுதாயமும் ஒட்டாண்டியாகிவிட்டது
அதை இந்த கவிதையின் வரிகல் மிக அழகாக எடுதுச்சொல்லுகிறது இங்கு எனது முத்தரைய சமுதாயத்தை இந்த கவிதையின் வரிகளோடு ஒப்பிட்டு பார்க்கின்றேன்.
உழைத்த மாடுகளின்
கால்களுக்குச்
சேற்றுப் பூச்சு;
உயரத்தில்
சும்மா இருந்த கொம்புகளுக்கோ
வர்ணப் பூச்சு!
மாட்டுப்பொங்கலைபற்றி பாடிய ஒரு கவியின் வைர வரிகளில் இருந்து.நன்றி உயர்திரு கனி அவர்களே.
மாற்று இனத்தின் உயர்விற்க்கு ஏனியாய் இருந்தது முத்தரையர் சமுதாயம்.இருந்தும் அமைதியாய் இருந்தது அதற்க்கு கவி சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் அருமையான கவிதையை இங்கு உதாரணதிற்க்கு அழைத்துக்கொள்ளலாம்.
அகன்ற உலகு நான் 
என்றது அகல்
அழ்கிய உடல் நான்
என்றது திரி
அசையும் உயிர் நான்
என்றது சுடர்
உழைப்பு வடித்த
உதிரத் துளிகளாய்த்
தேங்கிய எண்ணெய்
வாய் திறக்கவே இல்லை
இந்த கவிதையில் தேங்கி நிற்க்கும் எண்ணெயாக முத்தரையர் சமுதாயத்தை ஒப்புமை படுத்தி பார்க்கின்றேன்.மாற்றாறை புகழ் வெளிச்சத்திற்க்கு கொண்டு சென்று தன்னை இருட்டு ப ள்ளத்திற்க்குள் ஒளித்துக்கொண்டும் புதைத்துக்கொண்ட முத்தரையர் சமுதாயத்தை மாற்று சமுதாய நண்பர்கள் இந்த நன்றியை மறந்து எங்க்ளை நசுக்குவது முறையா?????
உன் சமுதயதினருக்கு வேலை வாய்ப்பு கிடையாது,இட ஒதுக்கீடு கிடையாது எதிலும் உனக்கான நீதி கிடையாது ஆனால் மாற்றாரின் வெற்றிக்கு மாடாய் உழைக்கின்றாய் இதை மித்ரா அவர்களின் ஐக்கூவை இங்கு எனது இனதுக்காரணோடு பொருத்திப்பார்கின்றேன்.
பசித்த குழந்தைகள் அழும்
கஞ்சி காய்சுவான் தந்தை
சுவரொட்டிகல் ஒட்ட.
இது போல அடுக்கி கொண்டே போகலாம்.என்ன செய்ய போகின்றோம் நாம்.
காசுக்காக உன்னை விற்க்கும் கூட்டம் ( உன் வாக்குகளை) யார் என்று தெரியாமல் உன் இனத்தின் அழிவை தடுக்காத தற்குறிகளின் போக்கை நோக்கும்போது கீழ்கானும் கவிதையொடு இணைத்துப் பார்க்கின்றேன் நா.காமரசன் அவர்களின் கவிதையின் ஈற்றடி இரண்டை மட்டும் எடுத்துக்கொள்கிறேன்.
நிர்வாணத்தை விற்பனை செய்கிறோம்
ஆடை வாங்குவதற்காக!
சங்கினால் பால் கொடுத்தால் வாய் நோகும் என்று நுங்கினால் பால் புகட்டுவா(ர்)ரை (என) எதிர்னோக்கி ஏமாந்து நிற்க்கும் என் இனத்தை காக்க என்ன செய்வது.என்ன செய்ய போகின்றோம்.

No comments:

Post a Comment

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை...