Wednesday, 16 November 2016

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்


முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்....

இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை வெவ்வேறு வழிகளில் மகிழ்வித்து சிவபதவியை அடைந்த சிவபக்தர்கள் நாயன்மார்கள் ஆவார்கள்.அவர்கள் அறுபத்து மூவர் என சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தில் கூறுகிறார்.அவர்களில் முத்தரையர் குலம் உதித்தவர்கள் .

1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்
2 ) மங்கையர்க்கரசியார்
3 ) நரசிங்க முனையரைய நாயனார்
4 ) மெய்ப்பொருள் நாயனார்
5 ) கண்ணப்ப நாயனார் (  நாம் அனைவரும் அறிந்த ஒருவர் )

1 ) புகழ்ச்சோழ நாயனார் என்கிற குவாவன்

இவர் இரண்டாம் பெரும்பிடுகு என்று அழைக்கப்பட்ட சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தந்தை.

2 ) மங்கையர்க்கரசியார்

இவர் குவாவனின் மகளும். சுவரன் மாறனின் பாட்டன் குவாவன் மாறனின் தங்கையும் ஆவார். இவர் நின்ற சீர் நெடுமாற நாயனார் என அழைக்கப்பட்ட கூன் பாண்டியனின் மனைவி.

3 ) நரசிங்க முனையரைய நாயனார்

இவர் திருமுனைப்பாடி நாட்டை திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர் தந்தை வாணகோ அரையர் எனப்படும் தெய்வீகன் ஆவார். இவர் திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு சேதிநாட்டை ஆண்டு வந்த மெய்ப்பொருள் நாயனாரின் அண்ணன் .மெய்ப்பொருள் நாயனார் வாணகோ முத்தரையரின் சிற்றப்பா ஆவார்.

4 ) மெய்ப்பொருள் நாயனார்.

இவர் சேதி நாட்டையும் ,மேற்க்காவலூர் நாட்டையும் ஒரு சேர ஆண்டு வந்தார். இவர் பக்தரானாலும் போர்கள் பல செய்து வெற்றிகளைக் கண்டவர்.

தகவல் குறிப்பு தந்து உதவியவர் : உயர்திரு ..ஐயா.திருமலை நம்பி .புதுக்கோட்டை.

Tuesday, 15 November 2016

முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள்



முத்தரையர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஆவணங்கள் .....முத்தரையர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஆவணங்கள்.


1) இந்திய அரமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 12  ,14 ,15 ,16 ,29 ,38 .46 ,141 ,309 ,335 ,338 ,338  ஏ,340 ,341 ,342 ,343 ,344 .
           
2) இந்திய அரசின் (முதலாவது) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் காகா காலேல்கர் குழு அறிக்கை (1985 ).

3) தமிழக அரசின் (முதலாவதாக) பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் ஏ .என்.சட்டநாதன் குழு அறிக்கை (1970 )

4)இந்திய அரசின் இரண்டாவது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் மண்டல் குழு அறிக்கை (1980 )

5)தமிழக அரசின் இரண்டாவது  பிற்படுத்தப்பட்ட வகுப்புகளின் ஆணையம் எனப்படும் அம்பா சங்கர்  குழு அறிக்கை (1985 )

6) மண்டல் குழுவின் பரிந்துரைப்படி பிரதமர் வி.பி.சிங் 1990 இல் பிறப்பித்த அரசாணையை எதிர்த்து உயர் சாத்தினார் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கை 9 நீதிபதிகள் பேராயம் விசாரித்து 16 .11 .1992 இல் வழங்கிய தீர்ப்பும் அதன் பிறகு கூறப்பட்ட தீர்ப்புகளும் .

7) மத்திய மாநில அரசுகள் பிறப்பித்த முக்கியமான அரசாணைகள் .

8) ஐ ஐ டி, ஐ ஐ எம் , முதலான மைய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இத பிற்படுத்தப்பட்ட  மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து இயற்றப்பட்ட மையக் கல்வி நிறுவனங்கள் ( சேர்க்கையில் இட ஒதுக்கீடு ) சட்டம் 2007 .

9) மைய்ய அரசின் கல்வியில் அளிக்கப்பட இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பேராயம் 10 .04 .2008 ஆம் நாள் வழங்கிய தீர்ப்பு.

10) சட்டநாதன் குழு அறிக்கையிலும் அம்பாசங்கர் குழு அறிக்கையிலும் பல வகுப்புகளைப் பற்றி எழுதப்பட்டுள்ள குறிப்புரைகளும் புள்ளி விவரங்களும் .

11) பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதிகள் .

12) வே.ஆனைமுத்துவின் கருத்துக் கருவூலம் தொகுப்பில் வகுப்புரிமை பற்றிய தொகுதி

பெரியார் ஈ.வெ.ரா ..டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு..
(தகவல் உதவி : கலத்தம்பட்டு சதாசிவம் ராமலிங்கம் )

முத்தரையர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்து இருக்கவேண்டிய ஒன்று. கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் நம் சமுதாயம் எவ்வளவு உரிமையை இழந்திருக்கிறோம் என்று அறிய வேண்டும். நாம் இழந்த உரிமையை பெற வேண்டும் என்றால் நம் சமுதாயம் அறிந்து இருக்க வேண்டியவைகளை நம் சமுதாய அமைப்புகள் கொண்டு வந்து மக்களிடம் சேர்த்து அதற்கான நடவடிக்கைளை எடுத்தார்களா என்று தெரியாது. சில சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தியிருக்கிறார்கள் ஆனால் இட ஒதுக்கீடு, அதன் அவசியம், தேவை, போன்றவற்றை மக்களிடம் அவர்கள் விளங்கி கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறி மக்களை திரட்டி கவன ஈர்ப்பு,கண்டன பேரணி,பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை சென்னையில் நடத்தினால் மட்டுமே இந்த இனத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

பழ .சங்கிலிதேவன் பழுவேட்டரையர் .

Saturday, 12 November 2016

ஆன்மீகத்தில் முத்தரையர்கள் -திருப்பதி சுவாமிகள்


திருப்பதி சுவாமிகள் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் திருப்பதி சுவாமிகள் திரு .மு.சுப்ரமணிய முத்தரையருக்கும் ,வெள்ளையம்மாளுக்கும் மகனாய் 1873 ஆம் ஆண்டு அவதரித்தார்.திருப்பதி சுவாமிகளை பெற்றதால் அரவக்குறிச்சி ,ஆன்மீக வரலாற்றில் புகழ் பெற்றது.

சுவாமிகள் தொடக்கக் கல்வி முடிந்ததும் அரவக்குறிச்சி அருகில் உள்ள நல்லமாகாளிபட்டியில் உயர் கல்வியைத்  தொடர்ந்தார்.குருக்கள் பரம்பரையில் உதித்த தெய்வசிகாமணி குருக்கள் என்பார் இவரது நல்லாசிரியராக திகழ்ந்தார் .தமிழ் ,வடமொழி இலக்கியங்களைக் கற்றுத்  தேர்ந்தார்.

துறவு வாழ்க்கையில் நாட்டம் கொண்ட சுவாமிகள் தந்தையாரின் தோட்டத்திலுள்ள விநாயகர் கோவிலில் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.தமது குருவைத் தேடிப் பல இடங்களுக்கும் சென்ற சுவாமிகள் தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் பிரம்மாஸ்ரீ சுயம்பிரகாச சிவானந்த சுவாமிகளை நேரில் கண்டு அவரது சீடரானார்

அரவக்குறிச்சி கோவில் மடத்தில் தங்கி கணேசருக்கு ஆராதனை செய்துவரும் காலத்தில் தம்மை வந்தடைந்தவர்களுக்கு நல்லுபஹ்தேசம் செய்யும் வழக்கத்தை கொண்டார்.சில சமயங்களில் அண்மையிலுள்ள திருவெஞ்சமாக்கூடல் ,கரூர் முதலான தலங்களுக்குச் சென்று வருவதுண்டு.

வெஞ்சமாக்கூடல் விகிர்தீசர் மீதும் அம்மை பண்ணோர் மொழியாள் மீதும் சுவாமிகள் பக்திப் பரவசத்துடன் பாடிய பாடல்கள் நெஞ்சை நெக்குருக வைக்கும்.சுவாமிகள் தமது " பக்தி நெறி " எனும் நூலில் நான்கு பாடல்கள் விகிர்தீசர் மீதும், பண்ணோர் மொழியாள் மீதும் பாடியுள்ளார்.

"வாட லின்றி மகிழன்பர் நெஞ்சினுளும்
வாச மாய விகிர் தீசனே"

என்றும்
"விண்ணினேர் மேனி விகிர்தனார் மகிழ
வெஞ்சமாக் கூடலில் அமர்ந்த
பண்ணினேர் மொழியாய் வெண்மதிக் கொழுந்தின்"

என்றும்

சுவாமிகள் வெஞ்சமாக்கூடல் ஈசனையும் அம்பிகையையும் புகழ்ந்து பாடியுள்ளார்.

சுவாமிகளின் நூல்கள் .

திருப்பதி சுவாமிகள் பல அறிய நூல்களை இயற்றி அருளினார். அவற்றுள் கீழ்காண்பதை மட்டுமே இது கானும் நமக்குக் கிடைத்துள்ளன.

அவைகள்.
1 . ஸ்ரீ வித்தியா கீதை
2 . பக்தி நெறி
3 .பழமொழிப்போதம் (1932 )
4 .தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்
5 .திருநாம மாலை (1942 )
6 .ஞானலோகம் என்னும் யுக்தி சாகரம் (1950 )
7 .முக்தி நெறி
8 .சதாசிவப்பிரும்ம ஸ்தோத்திரம்
9 .தேவிஸ்தோத்திரம்
10 .விவேக சித்திரம்
11 .தத்தாத்ரேயர் ஸ்தோத்திரம்
12 .மாரியம்மன் தாலாட்டு
13 .சிவசூத்திர விமர்சனி (உரைநடைநூல்)
14 .வில்மாதர் விஷம்
15 .சகுந்தலா அல்லது காதல் வெற்றி

சுவாமிகளின் மறைவு
சுவாமிகள் குளித்தலை கடம்பர் கோவிலில் தமது 64 ஆம் அகவையில் 1937  ஆம் ஆண்டு நீர் விகற்ப சமாதியில் அமர்ந்தார்.ஆண்டு தோறும் கடம்பர் கோவிலில் சுவாமிகளுக்கு குருபூசை நடைபெறுகிறது.

Friday, 11 November 2016

வலையர் (அ) வலையன் பெயர் காரணம்


"வலையன் என்றால் கோவம் கொள்ளாதீர்கள் "

வலையக்காரர் என்பதும் முத்தரையர் இனத்துள் ஒன்று .போரில் வளை வலை எரிதலும்,அதனால் படைகள் முன்னேறி வெற்றி   பெறுதலும் ஒரு நிகழ்ச்சியாக இருந்தது. வலை எறிதலில் தேர்ச்சி பெற்றவர்களே எய்ய முனைவர். முத்தரையர் இனத்தில் வலை எறிந்து சிறப்பு பெற்றதால் வளையக்காரர் எனச் சிறப்பிக்கப் பெற்றனர் .ஆதலால் இது தொழிலால் வந்த பெயர் . பெருமை கொள் முத்தரையர்களே.

வல்லயம் எறிதல் படைக்கலாம் எறிதலில் ஒன்றாகும், வல்லயம் என்பது ஒரு படைக்கருவி.அத்தொழில் புரிந்தோர் வல்லயர் எண்ணப்பட்டு நாளடைவில் வலையர் எனச் சிதைந்து வழங்கலாயினர். இதுவும் தொழிலால் அமைந்த பெயரே.

கோவை மாவட்டத்தில் வலையர் குடும்பங்கள் ராணுவத்தொடர்புடைய குடும்பம் என கருதியே அவர்களை காவல் நிலையம் போன்ற கண்காணிப்பு நிலையங்களில் வந்து தங்கச் செய்ததோடு அவர்கள் வசம் இருந்துவந்த வல்லயம் என்ற போர்கருவிகளையும் பறிமுதல் செய்துள்ள செய்தியை அங்கு வாழ் வலையர் குடும்பங்களை கேட்டு அறியலாம்.

இனி எவனாவது வலையன் என்ற ராணுவ தொடர்புடைய இந்த காவல் கார சாதியை பார்த்து, ஊருக்கு நியாயம் சொன்ன அம்பலகார சாதியை பார்த்து, வலையன் என்ற வரலாற்று பெயரை அவப்பெயரா சொல்லி இனத்தை கேவல படுத்த நினைத்து

"வலையன் "  என்று அழைத்தால் அவனிடம் மேலே சொன்ன வரலாறை கூறிவிட்டு "காலில் கிடக்கும் செருப்பால் அடித்துவிட்டு " அந்த இடத்தைவிட்டு  நகருங்கள். அதுவும் அதிகாரத்தின் எந்த உயரிய பதவியில் இருந்தாலும்.

வரலாறு தெரியாமல் இதுநாள் வரை இருந்ததற்கு இந்த அடி என்று கூறிவிட்டு வாருங்கள்.

குறிப்பு உதவி : சி.க .பழனிசாமி .MA .B Ed . ஒண்டிப்புதூர் ,கோவை.



இந்திய சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்கள் -தியாகி .அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்

அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

தந்தை :அய்யப்பன்
தாய் :முத்து பேச்சியம்மாள்

தேசப்பணிகள் :
1931 இல் கள்ளுக்கடை மறியல்,சுபாசுசந்திர போசு ,நேரு இளைஞர் மன்றம் தோற்றுவித்து நடத்துதல் .
1933 -இல் தனுசுகோடி காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசி.
ஆகஸ்ட் புரட்சியில் தனிநபர் சத்தியாகிரகம் .
ராமேஸ்வரம் இந்து தர்ம சேவா சங்கத்தை தோற்றுவித்து தலைவரானார்.தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு கமிட்டி செயலாளர் ,கிஜன சேவா சங்க செயலாளர் .
1933 இல் கள்ளுக்கடை மறியலினால் சிறையில் ஆங்கிலேயர் அடைத்தனர் .
1937 -இல் வலையர் முன்னேற்ற சங்கத்தை தொடங்கி 1952 -இல் கண்ணப்பர்குல வலையர் சங்கமாக நடக்க தொடங்கியது.தவத்திரு சிருங்கேரி மேடம் சங்கராச்சாரியாரின் தொடர்பு மடாதிபதி கல்யாணதாஸ் தொடாண்டிய ராமேஸ்வரம் ,இந்து  தர்ம சேவா சங்கத்திற்கு தலைவரானார்.
தமிழ்நாடு மீனவர் சங்கம்,விசைப்படகுக்காரர்கள் சங்கம் ,கல்வி ,பொது நலத்துக்கு தலைமையேற்று சேவை செய்தார்.

ராமேஸ்வரத்தில் தன்னால் தொடங்கப்பட்ட கண்ணப்பர் குல வலையர் சங்கத்தை தமிழ்நாடு முத்தரையர் சங்கத்துடன் இணைத்தார் .இவரது மிகசிறந்த சேவையால் 07.09.1980  இல் மாநில முத்தரையர் சங்கத்திற்கு பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

சுதந்திர போராட்டத்தில் முத்தரையர்களின் பங்கு.

இந்திய சுதந்திர போராட்டத்தில் அதிகமான முத்தரையர்கள் கலந்து கொண்டாலும் இவர்கள் இருவரும் அதிக பிரபலம் அடைந்தவர்கள் ஒருவர் ஆ.முத்தையா ,தளுகை பாதர்பேட்டை . மற்றுமொருவர் அ.அய்யாச்சாமி,ராமேஸ்வரம்.

இதில் காலத்தால் முந்தியவர் திரு ஆ.முத்தையா .
தந்தை  :ஆணை முத்துராஜா
தாய் :பெரியம்மாள்

1914  ஆம் ஆண்டு  15  வயதில் தந்தையை இழந்தார் .உடன் தனது தாயாருடன் இலங்கை சென்றார் .அங்கே காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தார். தனது 25 வயதில் காங்கிரஸ் பேரியக்கத்தில் தீவிரமாக பங்கு பெற்றார்.1942 செப்டம்பரில் வெள்ளையர்களால் கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார் மீண்டும் 1943 கைது செய்யப்பட்டு பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்.

தேச தலைவரான காமராஜர்,கக்கன் ஆகியோர் தொடர்பு ஏற்பட்டது .1948 இல் திருச்சி வந்து காங்கிரசில் போட்டியிட்டு வென்றார் .1954 இல் திருச்சி மாவட்ட காங்கிரசில் செயலாளர் ஆனார் .

வகித்த பதவிகள்
1959 இல் திருச்சி மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினர்
1957 -1962  வரை உப்பிலியபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
1962 -1968 வரை திருச்சி நகர சிட்டி கிளப் தலைவர் .
1963  இல் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் உறுப்பினராகத் தேர்வு பெற்று பணியாற்றினார்.



Thursday, 10 November 2016

வலையர்களின் உட் கிளைகள்

வலையர்களின் உட் கிளைகள்

கருப்பாசி வலையர்கள்
வன்னிய வலையர்கள்
செம்பாசி வலையர்கள்
சருகு வலையர்கள்
செட்டிநாடு வலையர்கள்
ஆயா வலையர்கள்
மூக்குத்தி போடாத வலையர்கள்

உட்கிளைகள் அடங்கிய பகுதிகள்

எட்டரை கோப்பு நாடு,
தானம்பு நாடு
வழுவாடி நாடு
நடு நாடு (அ) அசல் நாடு
குரும்ப நாடு
வன்னிய நாடு
அம்பு நாடு
புனல் நாடு
வேடன் நாடு
சுளுந்துக்காரன் நாடு
அம்பலகாரன் நாடு
வெள்ளாம்புட்டு நாடு
கறடி  நாடு
கங்கு நாடு
பாசிக்கட்டி நாடு
காரைக்காட்டி நாடு

மேலே கூறிய நாடுகள் பரவியுள்ள இன்றைய மாவட்டங்கள்.

 ராமநாதபுரம்
மதுரை
தஞ்சாவூர்
திருச்சி (புதுக்கோட்டை)
திருநெல்வேலி
கோவை
வட ஆற்காடு
நீலகிரி மாவட்டங்கள்

தகவல் ஆதாரம் : தி வலையர் -கல்ச்சர் அண்ட் எகனாமிக்ஸ் , ஆர் .இ.தேசிங்கு செட்டி . பேராசிரியர் ராஞ்சி பல்கலைக்கழகம் .



முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்

முத்தரையர் குலம் உதித்த நாயன்மார்கள்.... இந்த அண்டத்தை ஆக்கவும் ,காக்கவும்,அழிக்கவும் ஆன தொழில்களைச் செய்யும் முழுமுதற் கடவுளாவார் .அவரை...